Skip to content

திருக்குறளில் மருத்துவம்

Category:

திருக்குறளில் மருத்துவம்…!

“திருக்குறளில் மருத்துவம்” என்கிற நூலை, நண்பர் குறள் முரசு மருத்துவர்.கோ.ராஜேஷ் கோபால் தமிழன்புடன் அனுப்பியது வரப்பேற்றேன்.

மருத்துவர் ஆங்கில மருத்துவம் பயின்றவர்.

“மருந்து” என்கிற குறளின் அதிகாரத்தில் மட்டுமின்றி, உடல், உள நலன் காக்கும் மருத்துவ குறிப்புகளையும், பிற அதிகாரங்களில் இருந்தும் பொருத்தமான குறள்களை எடுத்து, 33 தலைப்புகளில் சுருங்கச் சொல்லி, அழகாக விளங்க வைத்துள்ளார்.

கட்டுரைகளில் பொருத்தமான உவமை, எழில் தமிழ், ஆசிரியரின் பல்லாண்டு மருத்துவ அனுபவம் மூன்றும் இணைந்து, வாசகனுக்கு அமுது படைக்கிறது.

குறள் நெறியில் அறம் சார்ந்த, இதுபோன்ற நல்ல, திறமையான மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் ஆங்காங்கு சிலர் இன்னமும் இருப்பதால் தான், இந்த சித்திரை கோடையிலும் மழை கொட்டித் தீர்க்கிறது.

மருத்துவருக்கு நமது வாழ்த்துக்களும், பாராட்டுகளும்!

தொகுப்பு
#வழக்கறிஞர்_பழநிதீபன்
தமிழர் தலைவர்.