Skip to content

திரு. பழமாறவர்மன்,தஞ்சை

திரு. பழமாறவர்மன், தஞ்சை

திருக்குறள் தொண்டர் பழ. மாறவர்மன் அவரது தந்தையார் தமிழாசிரியர் பழனி மாணிக்கத்தாலேயே வார்த்தெடுக்கப்பட்டவர். தஞ்சையில் பழனி மாணிக்கம் காலத்திலேயே தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உலகத் திருக்குறள் பேரவை தொடங்கப்பட்டு அதை வளர்த்தெடுக்க பலரும் முன் வந்த பொது மாறவர்மனும் இளைஞர் அணி போலவே அவ்வமைப்பைக் கட்டியமைக்கப் பாடுப்பட்டவர்.

அதனால் தான் தந்தையார் இறந்த பிறகு அவர் இடத்தில் வைத்து திருக்குறள் அன்பர்கள் அனைவரும் மாறவர்மன் தலைமையில் தற்போது குன்றக்குடி பொன்னம்பல வழிகாட்டுதலிலும், அமைச்சர் உபயதுல்லா ஆதரவுடனும் சிறப்பாக உலகத் திருக்குறள் பேரவையை நடத்தி வருகிறார். அவர் தந்தை விட்டுச் சென்ற அச்சகத் தொழிலையே சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டு அதன் வாயிலாக திருக்குறள் பரப்புரையும் நடத்தி வருகிறார்.

அந்த அமைப்பின் 23 வது கூட்டத்தில் நானும் தஞ்சை வட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக இருந்த போது கலந்து கொண்டேன். திட்டமிட்ட நேரத்தில் தொடங்குவது முடிப்பது என்பதை திருக்குறள் போலவே செம்மையாக செய்து வருகிறார். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க திருக்குறள் ஒட்டிகள் அச்சடித்து வழங்குவது நகர் முழுவதும் போட்டிகள் வைத்து வள்ளுவரை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பதை மாறவர்மன் செய்ய  முன் வந்துள்ளார். தமிழத்தின் சிறந்த திருக்குறள் சொற்பொழிவாளர்களை அழைத்துப் பேச செய்வதும் திருக்குறள் போட்டிகள் நடத்தி பரிசளிப்பதும்  மாறவர்மனின் சிறப்பு செயல் திட்டமாகும்.

தஞ்சையிலுள்ள திருக்குறள் அன்பர்கள் கந்தசாமியின் பேரன் கலியபெருமாள், கோபிசிங், கோபாலகிருஷ்ணன், இராம சந்திரசேகரன் ஆகிய அனைவரும் மாறவர்மனோடு சேர்ந்து திருக்குறள் பரப்புரை செய்வது எந்த மாவட்டமும் செய்யாத ஒன்றாயினும் அவர்கள் சார்பாக திருவள்ளுவர் சிலையும், ஓர் அரங்கமும் கட்டி நிரந்தர பரப்புரை மையத்தை உருவாக்கினால் எக்காலத்திற்கும் பயன்படும்.  இதை மாறவர்மனால் செய்ய முடியும். அவர் அதை வள்ளுவருக்காக செய்யவேண்டும்.

மாறவர்மன் திருக்குறள் தொண்டர் வளர வாழ்த்துவோம்!.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்