Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-62 10/05/2024

May 10 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-62

வசுப மாணிக்கனாரின் ‘வள்ளுவம்’ பற்றிய சிறப்புத்தொடர் (11)

நூலின் பத்தாவது அத்தியாயமான ‘ திருக்குறள் நடை’ குறித்த நயவுரை

நாள்: 10/05/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி

நயவுரையாளர்: பேரா கு.வெ. பாலசுப்பிரமணியன்

இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு,இதே நேரம்.)

நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். குன்றக்குடி ஆதீனத்தால் ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினர் அளித்த ‘செம்மல்’ பட்டமும் பெற்ற பெருமகனார். இவரது மறைவிற்குப் பின் தமிழ்நாடு அரசு ‘திருவள்ளுவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்து, அவையோரை நோக்கிப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.

‘திருக்குறள் நடை’ (அத்தியாயம்-10) குறித்து அறிமுகம் செய்வார்: பேரா கு. வெ.பாலசுப்பிரமணியன்

கு.வெ.பா. என்று தமிழுலகில், அன்போடு அழைக்கப்பெறும் பேராசிரியர், கும்பகோணம் வெங்கடாசலம் பாலசுப்பிரமணியன், அகவை 80 நிரம்பியவர். சற்றேற 60 ஆண்டுகளாக கல்விநிலையங்களிலும் பிறவிடங்களிலும் கற்பிப்பதை கடமையாகவும் பேறாகவும் நினைத்து தொண்டாற்றி வருகிறார். ஏற்கனவே நவில் தொறும் நூல் நயம் நிகழ்ச்சியில் திருமேனி காரிஇரத்தினக் கவிராயர் இயற்றிய “நுண்பொருள் மாலை”-திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம் (ஆய்வுப் பதிப்பாசிரியர்: பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி) என்ற நூலைக் குறித்து நயவுரை ஆற்றியுள்ளார்.ஹார்வேர்ட் பல்கலையில் உரையாற்றும் வாய்ப்பு பெற்றவர். சொற்பொழிவாற்றும் உரையாளர், கற்பனைச் சிறகு விரிக்கும் கவிஞர் மேலும் வார-மாத இதழ்களில் தொடர்ந்து பங்களிப்பவர். இவையன்றி வாழ்க்கை வரலாறு, புதினம், கட்டுரை, தமிழிலக்கணம், நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனப் பல்துறைகளிலும் தடம் பதித்த இப்பேராசிரியர், 109 நூல்களின் ஆசிரியர். தமிழ், ஆங்கிலம் என இருமொழியிலும் வல்லவர். அண்மையில் ‘முன்றில் மா. அரங்கநாதன் இலக்கிய விருது -2024’ இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது இணைய வழியாக திங்கட்கிழமை தோறும், சிலப்பதிகாரம் வகுப்பு எடுத்து வருகிறார்.

Details

Date:
May 10
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,