Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-60 26/04/2024

April 26 @ 6:30 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-60

வசுப மாணிக்கனாரின் ‘வள்ளுவம்’ பற்றிய சிறப்புத்தொடர் (9)

நூலின் எட்டாவது அத்தியாயமான ‘குடும்ப வாழ்க்கை’ குறித்த நயவுரை

நாள்: 26/04/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி

நயவுரையாளர்: மருத்துவர் க.சத்யபிரபா தங்கமணி

இணைப்பு
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09

நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். குன்றக்குடி ஆதீனத்தால் ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினர் அளித்த ‘செம்மல்’ பட்டமும் பெற்ற பெருமகனார். இவரது மறைவிற்குப் பின் தமிழ்நாடு அரசு ‘திருவள்ளுவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்து, அவையோரை நோக்கிப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.

‘குடும்ப வாழ்க்கை’ (அத்தியாயம்-8) குறித்து அறிமுகம் செய்வார்:
பல்மருத்துவர் க. சத்யபிரபா தங்கமணி BDS

மருத்துவர் க.சத்யபிரபா தங்கமணி, ஓசூரில் ஒன்பது ஆண்டுகளாக பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். கணவர்: ரா கருப்பசாமி. இரண்டு பெண் குழந்தைகள். சிறு வயது முதலேயே திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டவர். ​12ம் வகுப்பில் 1330 அருங்குறட்பாக்களையும் ஒப்புவித்து ‘சாத்தூர் திருவள்ளுவர்-வாசுகி அறக்கட்டளை’யிடமிருந்து ‘திருக்குறள் மாமணி ‘ விருது பெற்றவர். ​அதே வருடம் சென்னையில் உள்ள ‘உலகத் திருக்குறள் மையம்’ நடத்திய திருக்குறள் போட்டியில் பங்கேற்று அருள்திரு திருக்குறள் தூயர் கு. மோகனராசு அவர்களிடமிருந்து ‘திருக்குறள் மாமணி’ விருதும் ‘இளம் திருக்குறள் தூதர் ‘ என்ற பட்டமும் பெற்றவர். ​01.01.2000 அன்று கன்னியாகுமரியில் நடந்த 133 அடி அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் ‘திருக்குறள் முற்றோதல்’ நிகழ்ச்சியில் தன்னுடைய தங்கையுடன் பங்குகொண்டு அன்றைய தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரிடமிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ‘குறள் பரிசு’ பெற்ற பெருமைக்கு உரியவர். திருக்குறள் பரிசு பெற்றமைக்காக அன்றைய மொரீசியஸ் அரசின் குடியரசுத்தலைவரிடமிருந்து பாராட்டு பெற்றார். பேச்சாளர் ஏற்கனவே இதே நிகழ்ச்சியில் “வள்ளுவர் வாய்மொழி” என்ற நூலை அறிமுகம் செய்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு!

Details

Date:
April 26
Time:
6:30 pm
Event Categories:
,