Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-58 12/04/2024

April 12 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-58

வசுப மாணிக்கனாரின் ‘வள்ளுவம்’ பற்றிய சிறப்புத்தொடர் (7)

நூலின் ஆறாம் அத்தியாயமான ‘அறிவுப் பிறப்பு’ குறித்த நயவுரை

நாள்: 12/04/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி

நயவுரையாளர்: மருத்துவர் சு. கார்த்தி

இணைப்பு
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09

நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். குன்றக்குடி ஆதீனத்தால் ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினர் அளித்த ‘செம்மல்’ பட்டமும் பெற்ற பெருமகனார். இவரது மறைவிற்குப் பின் தமிழ்நாடு அரசு ‘திருவள்ளுவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்து, அவையோரை நோக்கிப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.

‘அறிவுப் பிறப்பு’ (அத்தியாயம்-6) குறித்த நயவுரை: மருத்துவர் சு. கார்த்தி

மருத்துவர் சு. கார்த்தி, கோவை மாவட்டம், சோமனூரில் பிறந்தவர். அரசு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் (2000-2006) இளநிலை மருத்துவம் பயின்ற இவர் அக்கல்லூரியின் தமிழ்மன்றச் செயலாளராக செயலாற்றியவர். அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் சிறப்பு மருத்துவம் பயின்றார். சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியின் குழந்தைகள் நலத்துறையில் உதவிப்பேராசிரியராகப் (2010-2012) பணியாற்றினார். 2012ம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகள் நலம் மற்றும் பொதுநல மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழையும் மருத்துவத்தையும் இரு கண்களாகக் கொண்டு, பிணி தணிக்கும் பணி புரியும் தமிழ் மருத்துவர். உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு. இராசா ஐயாவின் தமிழ்ப்பயிற்சியில் செய்யுள் மீது ஆர்வம் பற்றிக்கொண்டதாகவும், மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு. குமாரசாமி ஐயாவின் வழிகாட்டுதலில் மருத்துவக்கல்வி சாத்தியமானதென்றும் கூறுகிறார். முத்தமிழுக்கு அடுத்து, நான்காம் தமிழாக விளங்கும் இணையத்தமிழை முன்னெடுக்க முயலும் தமிழ் மாணவர். மருந்துகள் மட்டுமின்றி, உணவு, வாழ்வியல் மூலம் நோய் நீங்கி வாழ இயலும் என்ற கருத்தில் ஆழமான நம்பிக்கையுடன் மக்களோடு பயணித்து வருகிறார். வாழ்க்கைத்துணைவர் மருத்துவர் பெ. நித்யா. மக்கட் செல்வங்கள் கபிலன் மற்றும் நறுமுகை.

ஒவ்வொரு வாரமும், இதே இணைப்பு இதே நேரம்!

Details

Date:
April 12
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,