Skip to content

சோம. வீரப்பன்

சோம. வீரப்பன் (05.08.1952)

திருமதி சிவகாமி ஆச்சி, திரு. சோமையா செட்டியார் இணையரின் மகனாக 05.08.1952 அன்று தேவகோட்டையில் பிறந்தவர்.

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பள்ளிகளிலும் பின் சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றவர். இளநிலை அறிவியல் கணிதம் முதுகலைப் பொருளியல் பயின்றவர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்பு முடித்தார்.

பஞ்சாப் நேசனல் வங்கியில் பொது மேலாளர் பதவி வகித்தார். ஸ்ரீரங்கநாதர் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பிலும் வங்கிக் கடன்களுக்கான ஆலோசனை வழங்கியும் வருகிறார். நாளிதழ்களில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன.

தென்காசி, திருவள்ளுவர் கழகம் உட்பட சில அமைப்புகளில் சொற்பொழிவாற்றியுள்ளார். வங்கிப்பணி மாமணி, சிறந்த எழுத்தாளர், தமிழ்ச் செம்மல், குறள் மணம் முதலான விருதுகளைப் பெற்றுள்ளார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995