Skip to content

கலைஞர் மு. கருணாநிதி

கலைஞர் மு. கருணாநிதி (03.06.1924 – 07.08.2018)

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முத்துவேலர் அஞ்சுகம் இணையருக்கு மகனாகத்  தோன்றியவர்தமிழக முதல்வராக ஆறுமுறை இருந்த  பெரும் சிறப்புக்குரியவர்; கவிஞராகஎழுத்தாளராகசிறுகதை ஆசிரியராகபுதின ஆசிரியராகவரலாற்றுப் புதின ஆசிரியராகநாடக ஆசிரியராக, திரைப்பாடலாசிரியராகதிரைக்கதை வசனகர்த்தாவாக, இதழாசிரியராகஆற்றல்மிக்க சொற்பொழிவாளராக, பன்முக ஆளுமை கொண்டவராகத் திகழ்ந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முகருணாநிதி அவர்கள்.

பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கழக இயக்கத்தை வளர்த்தவர்.  ‘தம்பிக்குஎன அண்ணா எழுதினார்.  ‘உடன்பிறப்பேஎனக் கலைஞர் எழுதினார். ‘உடன்பிறப்பேஎன முரசொலியில் எழுதி உடன்பிறப்பு நேயத்தை உருவாக்கியவர். காலையில் முரசொலி ஏட்டினைத் தொடுவோர் கலைஞரின் கழக இலக்கியத்திற்காக எனலாம். அக்கடிதங்கள் தமிழக வரலாற்றுக் கருவூலங்கள்தந்தை பெரியாரைப் போல 94 ஆண்டுகள்  சமுதாயத் தொண்டாற்றிய பெருந்தகை

திரைப்படங்களுக்கு இவர் எழுதிய வசனங்களும் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளும்  வரலாற்றையே மாற்றி எழுதின. சங்ககால வேந்தரைப் போல கவிஞராகவும் ஆட்சித் தலைவராகவும் விளங்கியவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள். பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெறாதவர் கலைஞர். ஆனால் இவரது படைப்புகளை ஆராய்ந்து பலர் முனைவர் பட்டங்களையும் எம்.ஃபில் என்கிற இளமுனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளனர்சிறப்புக்குக் காரணம்? ஒற்றைச் சொல்தான் பதில். இவரது உழைப்பு உழைப்பு உழைப்பு. ஓய்வறியா உதயசூரியன்  இவர். தமிழையும் தமிழ் அறிஞர்களையும் போற்றியவர்தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் இரு கண்களாகப் போற்றியவர்

திருவள்ளுவருக்குக்  கோட்டம் கண்டார்; 133  அடி உயர சிலை எடுத்தார்; குறள் உரை எழுதினார்; குறளோவியம் தீட்டினார்; சிலப்பதிகாரத்திற்காக  பூம்புகார் எழு நிலை கண்டார்கண்ணகிகோவலன்மாதவி, இளங்கோவடிகள்  சிலை வடித்தார்; தாய்த் தமிழைச்  செம்மொழியாக்கினார்ஒன்றிய அரசின் செம்மொழி நிறுவனம் கண்டார்வேறென்ன சொல்ல. . .  தமிழுக்காகவே வாழ்ந்தவர்தமிழ் உயர  தமிழர் நலம் பெற  வாழ்ந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995