Skip to content

இரா.கதிரவன்

இரா.கதிரவன் (11.05.1959)

திருமதி. இராதா, திரு. வே. இராமநாதன் இணையரின் மகனாக 11.05.1959 இல் இன்றைய கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிறந்தவர். தியாகராயநகர் ஸ்ரீராமகிருஷ்ண உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியும் கற்றவர். மாட்மேக் டொனால்ட் ஆலோசனை நிறுவனத்தின் சென்னை தொழில்துறை பிரிவின் இயக்குநராகவும் எல்.கே.எஸ். இந்தியா தொழில்துறை ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தினமணி நாளிதழிலும் தமிழ்மணி வார இதழிலும் மற்றும் சில இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். தான் பயின்ற பள்ளி, பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க உறுப்பினராக இருந்து இன்றும் பணியாற்றுகிறார். ‘முதல்மொழிஎன்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றி திங்கள்தோறும் இதழ் ஒன்றை வெளியிடுகிறார். தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் உறுப்பினராக இருந்து மாணவர்களுக்குப் பணியாற்றி வருகிறார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995